இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து அனில் கும்ப்ளே ராஜினாமா - பயிற்சியாளர் பதவியில் தொடர விருப்பமில்லை என விளக்கம்
Jun 20 2017 8:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து அனில் கும்ப்ளே திடீரென ராஜினாமா செய்துள்ளார்.
ஐ.சி.சி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடருடன் அனில் கும்ப்ளேவின் பயிற்சியாளர் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைந்தது. ஆனால் வரும் 23-ம் தேதி தொடங்க உள்ள West indies தொடர் வரை பயிற்சியாளர் பதவியில் தொடர அனில் கும்ப்ளே-வை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கேட்டிருந்தது. ஆனால் பயிற்சியாளர் பதவியில் தொடர விருப்பமில்லை என தெரிவித்திருந்த அனில் கும்ப்ளே திடீரென ராஜினாமா செய்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கும் , அனில் கும்ப்ளேவுக்கும் இடையே கருத்து மோதல் நீடித்து வந்ததாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் கடந்த 18-ம் தேதி நடைபெற்ற ஐ.சி.சி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிபோட்டியில் பாகிஸ்தானிடம், இந்திய அணி படுதோல்வியடைந்து கோப்பையை தவறவிட்டது. இந்த சூழலில் அனில் கும்ப்ளே பதவி விலகியது, இந்திய அணிக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.