இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளரை நியமிக்கும் விவகாரம் - முன்னாள் வீரர் ரவி சாஸ்திரியை நியமிப்பது குறித்து கிரிக்கெட் ஆலோசனைக் குழு தீவிர ஆலோசனை
Jun 22 2017 1:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரியை நியமிப்பது குறித்து கிரிக்கெட் ஆலோசனைக் குழு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த அனில் கும்ளே-யின் பதவிக் காலம் கடந்த 18-ம் தேதியுடன் முடிவடைந்தது. எனவே, புதிய பயிற்சியாளரை தேர்வு செய்யும் பணியில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஈடுபட்டு வந்தது. அனில் கும்ளேயின் பதவிக் காலத்தை மேலும் நீட்டிப்பது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் தற்போது திடீரென பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்திய அணி அடுத்தடுத்து, போட்டிகளில் பங்கேற்க இருப்பதால், புதிய பயிற்சியாளரை உடனடியாக தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்திய அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் வாரியத்தின் பல்வேறு பொறுப்புகளை வகித்தவருமான ரவி சாஸ்திரியை புதிய பயிற்சியாளராக நியமிப்பது குறித்து கிரிக்கெட் ஆலோசனைக் குழு பரிசீலித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்திய அணியின் கேப்டன் கோலியும் அவருக்கு ஆதரவு தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.