ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்- காலிறுதிக்கு இந்தியாவின் ஸ்ரீகாந்த், சாய் பிரனீத் ஆகியோர் முன்னேற்றம்
Jun 22 2017 12:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியின் காலிறுதி ஆட்டத்துக்கு இந்தியாவின் ஸ்ரீகாந்த் மற்றும் சாய் பிரனீத் ஆகியோர் முன்னேறியுள்ளனர்.
ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்புடன் இந்திய நட்சத்திர வீரர், வீராங்கணைகள் களமிறங்கியுள்ளனர். சமீபத்தில் நடந்த இந்தோனேசியன் ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற கிடாம்பி ஸ்ரீகாந்த் மற்றும் தென்கொரிய வீரர் Son Wan Ho ஆகியோர் 2வது சுற்றில் மோதினர். பரபரப்பான இந்த ஆட்டத்தில் 15-21, 21-13, 21-13 என்ற செட் கணக்கில் தென்கொரியா வீரரை தோற்கடித்த கிடாம்பி ஸ்ரீகாந்த் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
இதேபோல், சீன வீரர் Huang Yuxiang-ஐ தோற்கடித்த சாய் பிரணீத் அடுத்த சுற்று முன்னேறியுள்ளார். இதையடுத்து, நாளை நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் கிடாம்பி ஸ்ரீகாந்த்தும், சாய் பிரணீத்தும் மோத உள்ளனர்.
மகளிருக்கான ஒற்றையர் பிரிவு 2வது சுற்று ஆட்டத்தில், இந்தியாவின் பி.வி.சிந்து மற்றும் சீன வீராங்கனை Chen ஆகியோர் இன்று மோத உள்ளனர். மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் சாய்னா நேவால், மலேசியாவின் Soniia Cheah-ஐ சந்திக்கிறார்.