இலங்கை கிரிக்கெட் வீரர்கள் உடல்தகுதியின்றி காணப்படுவதாக அந்நாட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்த கருத்துக்கு முன்னணி வீரர் மலிங்கா கடும் கண்டனம்
Jun 22 2017 6:09PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அண்மையில் நடைபெற்ற ஐ.சி.சி. டிராபி கிரிக்கெட் போட்டியில் இலங்கை வெற்றி வாய்ப்பை இழந்து லீக் சுற்றிலேயே வெளியேறியது. இலங்கை விளையாட்டு வீரர்களை கடுமையாக விமர்சித்துள்ள அந்நாட்டு அமைச்சர் தயாஸ்ரீ ஜெயசேகரா, இலங்கை வீரர்கள் உடல்தகுதியை இழந்துவிட்டதாகத் தெரிவித்திருந்தார். இதனால் கொதிப்படைந்த முன்னணி வீரர் மலிங்கா, இலங்கை அமைச்சருக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இலங்கை அமைச்சர் குளுகுளு அறையில் இருந்து பேசுவது எளிதான செயல் என்றும், விளையாட்டு வீரர்களின் களத்தில் இறங்கிப் பார்த்தால்தான் அவர்களின் சிரமம் தெரியும் என்றும் மலிங்கா விளாசியுள்ளார். கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்து அதற்கான ஒப்புதலை அமைச்சகத்திடம் இருந்து பெறப்பட்ட பின்னரே, அணி விளையாடச் செல்வதாகவும், இதில் வீரர்களின் திறமையை விமர்சிக்க அவசியம் இல்லை என்றும் மலிங்கா, இலங்கை விளையாட்டு அமைச்சருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.