இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி - மழை குறுக்கிட்டதால் ஆட்டம் ரத்து
Jun 24 2017 1:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி 199 ரன்கள் எடுத்திருந்தபோது 2-ஆவது முறையாக மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 5 ஒரு நாள் போட்டி மற்றும் ஒரு டி-20 ஆட்டத்தில் அந்நாட்டு அணியுடன் மோதுகிறது. இதில் முதல் ஒரு நாள் ஆட்டம் போர்ட் ஆப் ஸ்பெயினில் நேற்று நடைபெற்றது.
அதில், டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பேட் செய்த இந்திய அணி, தனது 21-வது ஓவரில் 100 ரன்களை எட்டியது. அதே ஓவரில், பவுண்டரியை விளாசி, 67 பந்துகளில் அரை சதத்தை கண்டார் ரஹானே. அவரைத் தொடர்ந்து ஷிகர் தவனும் அரை சதத்தை எட்டினார்.
இந்தியா 39.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்திருந்தபோது, மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது கோலி 32 ரன்களுடனும், தோனி 9 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.