அமெரிக்காவில் ஒலிம்பிக் தினம் உற்சாக கொண்டாட்டம் : குழந்தைகள் மற்றும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டுகளில் மகிழ்ச்சியுடன் ஈடுபட்டனர்
Jun 24 2017 11:54AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்காவில் ஒலிம்பிக் தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கடற்கரைப் பகுதியில் குழந்தைகள் மற்றும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டுகளில் மகிழ்ச்சியுடன் ஈடுபட்டனர்.
தடகளம், நீச்சல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளை ஒருங்கிணைக்கும் ஒலிம்பிக் விளையாட்டுத் திருவிழா கடந்த 1894-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. பல்வேறு நாடுகளின் கலாச்சாரம் மற்றும் நட்புறவை வலுப்படுத்தும் இந்த விளையாட்டுத் திருவிழா தோன்றிய தினம் ஆண்டுதோறும் ஜுன் மாதம் 23ம் தேதி, உலகின் பல்வேறு நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர கடற்கரையில் ஒலிம்பிக் தின கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், சிறுவர், சிறுமிகள் மற்றும் பிரபல வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டு, பல்வேறு விதமான விளையாட்டுகளில் ஈடுபட்டு மகிழ்ந்தனர். வரும் 2024-ம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுத் திருவிழாவை நடத்த லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் பிரான்சின் பாரீஸ் நகரங்களிடையே போட்டி நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.