ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடர் - சீன வீரரை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் தகுதி
Jun 24 2017 12:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடரில், ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டிக்கு இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் முன்னேறியுள்ளார்.
உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடர், சிட்னியில் நடைபெற்று வருகிறது. இந்திய வீராங்கனைகள் சாய்னா, பி.வி.சிந்து ஆகியோர் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறிய நிலையில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் கிடாம்பி ஸ்ரீகாந்த் அசத்தி வருகிறார். அரையிறுதியில் சீன வீரர் Shi Yuqi-ஐ எதிர்கொண்ட அவர், 21-10, 21-14 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம், சூப்பர் சீரிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு கிடாம்பி ஸ்ரீகாந்த், 3-வது முறையாக தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.