நாகர்கோவிலில் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்புகள் நீட்டிக்கப்பட்டுள்ளதால் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி
Jun 24 2017 1:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்புகள் நீட்டிக்கப்பட்டுள்ளதால் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் கோடைகால நீச்சல் பயிற்சிகள் வகுப்புகள், அண்ணா விளையாட்டரங்கில் நடத்தப்பட்டன. இதற்கு மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது.கடந்த 2 மாதங்களில் மட்டும் நான்கு கட்ட பயிற்சிகள் நடைபெற்றுள்ளன. கோடை காலம் முடிந்த பிறகும், பயிற்சி வகுப்புகளில் பங்கேற்க மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அதிக ஆர்வம் கொண்டுள்ளதால் பயிற்சி வகுப்புகள் நீட்டிக்கப்பட்டுள்ளன. இதற்காக தமிழக அரசுக்கு மாணவிகள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.