ஈரோடு மாவட்டம் சூரியம்பாளையம் பகுதிக்கழகம் சார்பில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கிரிக்கெட் போட்டி : வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் பரிசுகளை வழங்கினார்
Jun 26 2017 11:08AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஈரோடு மாநகர் மாவட்டம் சூரியம் பாளையம் பகுதிக்கழகம் சார்பில், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் பரிசுகளை வழங்கினார்.
இவ்விழாவில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் திரு.கே.ஏ.செங்கோட்டையன், நீட் தேர்வு விவகாரத்தில் மக்களின் நலனை முன்வைத்து மத்திய அரசிடம் தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தும் என்று தெரிவித்தார்.
தருமபுரி மாவட்ட சிலம்பம் விளையாட்டு சங்கம் சார்பில், மாவட்ட அளவில் சிலம்பாட்டப் போட்டி அதியமான் கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்பட்டது. இதில் 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.