நாகை மற்றும் அரியலூர் மாவட்டங்களில் நடைபெற்ற இறகுபந்து போட்டிகளில் 20-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன
Aug 17 2017 12:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டி கடந்த 3 நாட்களாக நடைபெற்றது. மாவட்டம் முழுவதிலும் இருந்து 25-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்று விளையாடின. இந்த போட்டியில் மயிலாடுதுறை கிங்ஸ் ரோட்டரி சங்க அணி சாம்பியன் ஷிப் பட்டம் வென்றது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் மாணவர்களுக்கான இறகுப்பந்து போட்டி நடைபெற்றது. இந்த போட்டிகளில் 12 பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். ஒற்றையர் மற்றும் இரட்டையர் , ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் மண்டல அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.