சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் டெல்போட்ரோ, டிமிட்ரோவ் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேற்றம்
Aug 17 2017 12:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்காவில் நடைபெற்று வரும் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில், டெல்போட்ரோ, டிமிட்ரோவ் ஆகிய முன்னணி வீரர்கள் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடைபெற்றுவரும் இத்தொடரில், நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில், ஆர்ஜென்டினாவின் மார்டின் டெல்போட்ரோ, அமெரிக்காவின் மிட்சல் க்ரூகரை எதிர்கொண்டார். மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டெல்போட்ரோ, 6-4, 6-4 என்ற நேர்செட்கணக்கில் க்ரூகரை வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு 2-வது சுற்று ஆட்டத்தில், பல்கேரியாவின் டிமிட்ரோவ், ஸ்பெயின் வீரர் ஃபெலிஸியானோ லோபசை 7-6, 6-4 என்ற செட்கணக்கில் தோற்கடித்து, அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில், டெல்போட்ரோவை, டிமிட்ரோவ் சந்திக்கிறார்.
இதேபோல், ஆஸ்திரேலியாவின் நிக் கீரியாஸ், உக்ரைனின் அலெக்சாண்டர் டோல்கோபோலோவை, 6-3, 7-6 என்ற நேர் செட்கணக்கில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.