உதகையில் டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாரத்தான் போட்டியின்போது மைதானத்தில் இருந்த மாணவ-மாணவிகள் மீது தேனீக்கள் கொட்டியதால் பரபரப்பு
Aug 17 2017 4:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டாக்டர் எம்.ஜி.ஆரின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள மலைப்பகுதி மேம்பாட்டு ஆணைய மைதானத்திலிருந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின்போது, மைதானத்திலிருந்த தேனீ கூண்டு திடீரென கலைந்து அங்கிருந்த 10க்கும் மேற்பட்ட மாணவிகள் மீது கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மாணவ-மாணவிகள் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.