திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் சார்பில், கல்லூரிகளுக்கிடையிலான மண்டல அளவிலான சதுரங்கபோட்டி தொடங்கியது
Aug 17 2017 4:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி தேசியக் கல்லூரியில் தொடங்கிய இப்போட்டிகள் 2 நாட்களுக்கு நடைபெறுகின்றன. இப்போட்டியில், திருச்சி, தஞ்சை, கரூர், பெரம்பலூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட 8 மாவட்டங்களைச் சேர்ந்த 70 கல்லூரிகளிலிருந்து 200க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். செமி லீக் முறையில் 5 சுற்றுகளாக நடைபெறும் இப்போட்டியில் வெற்றிபெறுபவர்கள் தென்னிந்திய அளவிலான பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான சதுரங்கப் போட்டியில் பங்கேற்று விளையாட உள்ளனர்.