திருச்சியில் மாணவர்களுக்கான யோகாசனப் போட்டி : 10 நிமிடங்களில் 250 ஆசனங்கள் செய்தனர்
Aug 19 2017 6:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சியில் மாணவர்களுக்கான யோகாசனப் போட்டியில் 10 நிமிடங்களில் 250 ஆசனங்களை செய்து சாதனை புரிந்தனர்.
திருச்சியில் இன்று பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான யோகாசன போட்டிகள் தனியார் பள்ளியில் தொடங்கியது. இதில் 300க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு ருத்ராசனம், ஏகபாதசிராசாசனம், முத்ரா, தர்பாசனம் உள்ளிட்ட பல்வேறு யோகாசனங்களை செய்தனர். இந்த போட்டியின்போது, சிறப்புப் பிரிவில் சென்னையைச் சேர்ந்த 3 மாணவர்கள் பத்து நிமிடத்தில் 250 யோகாசனங்களை செய்து அசத்தினர். பள்ளி மாணவர்களின் இச்சாதனை பதஞ்சலி புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம்பெற்றது. இன்றும், நாளையும் நடைபெறும் இந்த போட்டிகளில் வெற்றிபெறுபவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளது.