தூத்துக்குடியில் நடைபெற்ற மாணவர்களுக்கான மாதாந்திர வியைாட்டுப் போட்டி : 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்பு
Aug 23 2017 10:30AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடியில் நடைபெற்ற மாணவர்களுக்கான மாதாந்திர வியைாட்டுப் போட்டிகளில் 200க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. நேற்று நடைபெற்ற ஜூனியர் தடகளப் போட்டியில், சுமார் 200 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். தடகளம் மட்டுமின்றி, நீச்சல், வாலிபால், மற்றும் ஸ்குவாஷ் போன்ற போட்டிகளும் நடத்தப்பட்டன. இதில் வெற்றிபெற்ற மாணவர்கள் அடுத்த மாதம் மதுரையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.