திருச்சியில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்ட அளவில் தடகளப்போட்டி : 400-க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்பு
Aug 23 2017 1:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சியில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்ட அளவில் நடைபெற்ற தடகளப்போட்டிகளில் 400க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்ட அளவிலான தடகளப்போட்டிகள் திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் இன்று காலை தொடங்கியது. இப்போட்டிகளில் 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர். முன்னதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கல்யாண், மாணாக்கர்களின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்டு, போட்டிகளை தொடங்கி வைத்தார். இப்போட்டிகளில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 14, 17, 19 வயதிற்குட்பட்டோர் பிரிவுகளில் 100மீ, 400மீ, 800மீ ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம்தாண்டுதல், குண்டு எறிதல், வட்டுஎறிதல், ஈட்டிஎறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து ஒவ்வொரு பிரிவினருக்குமான போட்டிகள் நடைபெற்று வருகிறது.