சென்னையில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி - 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
Sep 18 2017 11:08AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னையில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பகல் - இரவு ஆட்டமாக நடைபெற்ற இந்தப் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. தொடக்க வீரர் ரகானே 5 ரன்களிலும், கேப்டன் விராட் கோலி, மணிஷ் பாண்டே ஆகியோர் ரன் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். 22 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 87 ரன்கள் எடுத்து தடுமாறிய நிலையில், ஹர்திக் பாண்ட்யா - எம்.எஸ். டோனி இணை, சிறப்பாக விளையாடி, இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டது. பாண்ட்யா 83 ரன்களும், டோனி 79 ரன்களும் எடுத்தனர்.
இந்திய அணி, 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் எடுத்தது. இந்நிலையில், மழை குறுக்கிட்டதால், டக்வொர்த் லீவிஸ் முறையில் 21 ஓவர்களில் 164 ரன்கள் என்ற வெற்றி இலக்கு ஆஸ்திரேலியாவுக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து, விளையாடிய களமிறங்கிய ஆஸ்திரேலியா, இந்திய வீரர்களின் அபார பந்துவீச்சால், 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றிபெற்றது. ஹர்திக் பாண்டியா, குல்திப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். 83 ரன்கள் மற்றும் 2 விக்கெட்டுகள் எடுத்த ஹர்திக் பாண்டியாவிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி கொல்த்தாவில் வரும் 21-ஆம் தேதி நடைபெறவுள்ளது.