கொரியா ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பி.வி.சிந்துவுக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பல்வேறு மாநில முதல் அமைச்சர்கள் வாழ்த்து
Sep 18 2017 11:34AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரியா ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி சியோல் நகரில் நடைபெற்றது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, உலக சாம்பியனான ஜப்பான் வீராங்கனை நொகோமி ஒகுஹராவை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றார். அவருக்கு, பிரதமர் திரு. நரேந்திர மோடி, டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், கொரியா ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பி.வி.சிந்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாகவும், வளர்ந்து வரும் வீராங்கனை சிந்துவின் சாதனையை கண்டு நாடு பெருமை கொள்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், தெலுங்கானா மாநில முதல் அமைச்சர் திரு. சந்திரசேகர் ராவ், மேற்கு வங்காள முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி, நடிகர் திரு. அமிதாப்பச்சன் உள்ளிட்ட பலரும் டுவிட்டரில் பி.வி.சிந்துவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.