தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற காமன்வெல்த் வலுதூக்கும் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த சேலம் மாணவி 8 தங்கப்பதக்கங்களை வென்று சாதனை
Sep 22 2017 6:47AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சேலம் அழகாபுரம் பகுதியைச் சேர்ந்த நிவேதா, அங்குள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயின்று வருகிறார். நிவேதாவின் தந்தை வெங்கடேஸ்வரன் வலு தூக்கும் வீரர் என்பதால் சிறு வயது முதலே நிவேதாவுக்கு வலு தூக்கும் பயற்சியை வழங்கி வந்தார். இதனால் அவர், மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் மட்டுமல்லாமல், கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய அளவிலான போட்டியிலும் கலந்து கொண்டு தங்க பதக்கத்தை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார்.
இந்நிலையில், தென் ஆப்ரிக்காவில் நடைபெற்ற காமன்வெல்த் வலு தூக்கும் போட்டியில், 19 வயதுக்குட்பட்டோருக்கான சப்ஜூனியர் பிரிவில் கலந்து கொண்ட மாணவி நிவேதா, எட்டு போட்டிகளிலும் அதிக அளவில் எடைகளை தூக்கி, முதலிடம் பிடித்து, ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தையும் பெற்று சாதனை நிகழ்த்தியுள்ளார்.
போட்டிகள் முடிந்து சொந்த ஊர் திரும்பிய மாணவி நிவேதாவுக்கு, சேலம் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து ஆசிரியர்களும், சக மாணவ மாணவிகளும் பூங்கொத்து கொடுத்து, தங்களது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.