சூதாட்ட புகாரில் சிக்கிய பாகிஸ்தான் வீரர் - ஐந்து ஆண்டுகள் தடை விதித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிரடி
Sep 22 2017 6:57AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மேட்ச் பிக்சிங் புகார் எதிரொலியால் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் காலித் லாடிப்புக்கு ஐந்து ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
பாகிஸ்தான் சூப்பர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த பிப்ரவரி மாதத்தில் துபாயில் நடந்தது. இந்த போட்டியின் போது 'ஸ்பாட் பிக்சிங்' முறைகேட்டில் ஈடுபட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் ஷர்ஜீல்கான் இடைநீக்கம் செய்யப்பட்டதுடன் 5 ஆண்டுகள் விளையாட தடையும் விதிக்கப்பட்டது.
இத்தொடரி,ல் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி சார்பில் விளையாடிய காலித் லாடிப் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கு பிசிபி ஊழல் தடுப்பு தீர்ப்பாயத்தில் நடந்து வந்த நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டதால் ஐந்து ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு.