தென் ஆப்பிரிக்க காமன்வெல்த் விளையாட்டு போட்டி : பளுதூக்கும் பிரிவில் தங்கம் வென்று புதுச்சேரி திரும்பிய வீரருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு
Sep 22 2017 5:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பலுதூக்கும் பிரிவில், தங்கம் வென்று புதுச்சேரி திரும்பிய வீரருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தென் ஆப்ரிக்காவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியின் வலுதூக்கும் பிரிவுக்கான போட்டியில் இந்தியாவின் சார்பில் 18 பேர் கலந்துகொண்டனர். இதில் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து தீ அணைப்பு துறையில் பணியாற்றும் வீரர் பாக்கியராஜ் கலந்துகொண்டார். அங்கு நடைபெற்ற வலுதூக்கும் போட்டியின் 93 கிலோ எடை பிரிவில் பாக்கியராஜ் தங்கம் வென்றார். மேலும், குழு போட்டியில் பங்கேற்ற அவர், நான்கு தங்க பதங்களை வென்று, அவர் புதுச்சேரி திரும்பினார். புதுச்சேரி எல்லையான கோரிமேடு பகுதியில் பொதுமக்கள் அவருக்கு பட்டாசு வெடித்து, மாலைகள் அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் சட்டசபை வளாகத்தில் முதலமைச்சர் நாராயணசாமி சந்தித்து வாழ்த்து பெற்றார்.