உதகையில் நடைபெற்று வரும் மாநில அளவிலான இளையோர் கபாடி போட்டி : 31 மாவட்டங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்பு
Sep 23 2017 12:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உதகையில் மாநில அளவிலான இளையோர் கபாடி போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 31 மாவட்டங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றுள்ளன.
உதகையில் உள்ள மலைப்பகுதி மேம்பாட்டு மைதானத்தில் மாநில அமச்சூர் கபாடி கழகம் மற்றும் நீலகிரி மாவட்ட கபாடி கழகம் சார்பில், இளையோருக்கான மாநில அளவிலான கபாடி போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் கோவை, சென்னை, திருச்சி, தூத்துக்குடி, சேலம், தருமபுரி உள்ளிட்ட 31 மாவட்டங்களைச் சேர்ந் அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். 16 வயதுக்கு உட்பட்ட வீரர்கள் பங்கேற்கும் இந்த 3 நாள் போட்டிகளில், முதல் சுற்று போட்டிகள் லீக் முறையிலும், காலிறுதி போட்டிக்கு பின்னர் நாக் அவுட் முறையிலும் நடைபெறுகின்றன. சிறப்பாக விளையாடும் 12 வீரர்கள் தமிழக அணிக்காக தேர்வு செய்யப்பட்டு, அடுத்த மாதம் ஜார்கண்ட்டில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான போட்டியில் கலந்துகொள்ள அனுப்பப்படுவார்கள் என விளையாட்டுப் பிரிவினர் தெரிவித்தனர்.