ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கான வெற்றிக்கோப்பை கேரள மாநிலம் கொச்சிக்கு வந்தடைந்தது : பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு
Sep 23 2017 1:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கான வெற்றிக்கோப்பை கேரள மாநிலம் கொச்சிக்கு வந்தடைந்தது. அதற்கு பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டித் தொடரை இந்த ஆண்டு முதன்முறையாக இந்தியா நடத்துகிறது. அடுத்த மாதம் தொடங்கவுள்ள இந்த போட்டித் தொடர், கொச்சி, கொல்கத்தா உள்ளிட்ட இடங்களில் நடைபெறுகிறது. இதனையொட்டி இதற்கான வெற்றிக்கோப்பை நேற்று கேரள மாநிலம் கொச்சிக்கு வந்தடைந்தது. விமான நிலையத்தில் குழுமியிருந்த ரசிகர்கள் வெற்றிக்கோப்பைக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதைத்தொடர்ந்து கொச்சியில் உள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கத்தில் ஃபிபா உலகக்கோப்பை அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அம்மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் திரு. ஏ.சி.மொய்தீன் கோப்பையை அறிமுகப்படுத்தினார். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்பந்து ரசிகர்கள் கலந்து கொண்டனர். மேலும் பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதனால் அப்பகுதி விழாக்கோலம் பூண்டது.
கொச்சியில் மொத்தம் ஏழு போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்த போட்டிகளை காண்பதற்காக ரசிகர்கள் உற்சாகமாக காத்திருக்கின்றனர்.