சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் : உலகின் முதல்நிலை வீரரான ரஃபேல் நடாலை வென்ற சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் ஃபெடரர் சாம்பியன்
Oct 16 2017 12:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில், உலகின் முதல்நிலை வீரரான ரஃபேல் நடாலை வென்ற சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் ஃபெடரர், சாம்பியன் பட்டத்தை பெற்றார்.
சீனாவின் ஷாங்காய் மாகாணத்தில் ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில், உலகின் முதல் நிலை வீரரான ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ரஃபேல் நடாலை, சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ரோஜர் ஃபெடரர் எதிர்கொண்டார். 71 நிமிடங்களை வரை நீடித்த போட்டியின் முடிவில், 6-4, 6-3 என்ற செட்களில் ரஃபேல் நடாலை வென்று, ரோஜர் ஃபெடரர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
ஷாங்காய் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில், ஃபெடரர் பெறும் இரண்டாவது பட்டம் இதுவாகும். ஏற்கனவே ஆஸ்திரேலியன் ஓபன் மற்றும் மியாமி மாஸ்டர்ஸ் தொடரில், ரஃபேல் நடாலை ஃபெடரர் வென்றது குறிப்பிடத்தக்கது.