கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், அவரது அண்ணன் மற்றும் தாய் சப்னம் சிங் ஆகியோர் மீது குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு
Oct 19 2017 3:39PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங், அவரது அண்ணன் சொராவர் சிங் மற்றும் அவர்களது தாய் சப்னம் சிங் ஆகியோர் மீது குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
யுவராஜ் சிங்கின் அண்ணன் மனைவி அகன்க்ஸாவுக்கும், அவரது கணவர் இடையே குடும்ப பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், உளவியல் ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் அவருக்கு தொல்லை அளிக்கப்பட்டதாக மனுவில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பான புகாரில், யுவராஜ் சிங்கின் பெயரும் இடம்பெற்றுள்ளது. அகன்க்ஸாவை அவரது கணவர் துன்புறுத்திய போது, யுவராஜ் சிங் அதை வேடிக்கைப் பார்த்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான அகன்க்ஸா, பின்னர் யுவராஜ் சிங்கின் அண்ணனை மணந்தார். சில மாதங்களிலேயே இந்த திருமண உறவு முடிவுக்கு வந்தது. இருவரும் விவாகரத்துக் கேட்டு நீதிமன்றத்தை அணுகியுள்ள நிலையில், தற்போது இந்தப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உள்நோக்கம் கொண்டது என யுவராஜ்சிங் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு வரும் 21ம் தேதி விசாரணைக்கு வருகிறது.