நாளை நடைபெறும் நியூஸிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி - தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வரும் இந்திய வீரர்கள்
Oct 21 2017 12:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நியூஸிலாந்து அணிக்கு எதிராக நாளை நடைபெறவுள்ள முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியையொட்டி, இந்திய வீரர்கள் மும்பையில் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டனர்.
நியூஸிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று 20-20 போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்காக கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து கிரிக்கெட் அணியினர் இந்தியா வந்துள்ளனர். இந்திய-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, நாளை மும்பையில் நடைபெறவிருக்கிறது. இதற்கு முன்னதாக சில பயிற்சி ஆட்டங்களில் நியூஸிலாந்து அணி பங்கேற்று விளையாடியது. இந்நிலையில், மும்பை Wankhede கிரிக்கெட் மைதானத்தில் இந்திய வீரர்கள், தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தொடர் வெற்றிகளை குவித்து வரும் நிலையில், நியூசிலாந்துக்கு எதிராக நாளை நடைபெறவுள்ள போட்டியைக் காண கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.
இதனிடையே, முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகனும், வேகப்பந்து வீச்சாளருமான அர்ஜுன் டெண்டுல்கர், இந்திய வீரர்கள் பயிற்சி மேற்கொண்டிருந்தபோது, அவர்களுக்கு பந்து வீசினார்.