நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி-20 கிரிக்கெட் போட்டி - 53 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி
Nov 2 2017 12:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி-20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இதனைதொடர்ந்து இரு அணிகளும் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகின்றன. முதல் டி-20 கிரிக்கெட் போட்டி டெல்லியில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் ஷர்மாவும், ஷிகர் தவானும் களம் இறங்கினர். இருவரும் நியூசிலாந்து பந்து வீச்சை சிக்சர்களும், பவுன்ரிகளுமாக விளாசினர். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரோகித் ஷர்மாவும், ஷிகர் தவானும் தலா 80 ரன்கள் எடுத்தனர்.
203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக Guptil-ம், Munro-வும் களம் இறங்கினர். இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் களம் இறங்கிய Willamson-ம், Latham-ம் நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து வீரர்கள், இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 53 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான 2-வது போட்டி குஜராத் மாநிலம் Rajkot-ல் வரும் 4-ம் தேதி நடைபெறுகிறது.