ஆசிய மகளிர் குத்துச்சண்டை போட்டி : இந்தியாவின் மேரி கோம் சாம்பியன்
Nov 8 2017 5:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆசிய மகளிர் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் மேரி கோம் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
ஆசிய மகளிர் குத்துச்சண்டை போட்டிகள் வியட்னாமில் கடந்த ஒருவாரக் காலமாக நடைபெற்று வந்தன. இதில், ஆசிய நாடுகளைச் சேர்ந்த முன்னணி வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதன் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் மேரி கோம் ஜப்பானின் சுபாசா கோமுராவை தோற்கடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருந்தார். 48 கிலோ எடை பிரிவில் இன்று நடைபெற்ற இறுதிச்சுற்றில் அவர் வடகொரியாவின் கிம் ஹையாங்மியை சந்தித்தார். இதில் சிறப்பாக செயல்பட்ட மேரிகோம், தனது அபார திறமையால் கிம் ஹையாங்மியை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் 5வது முறையாக ஆசிய மகளிர் குத்துச்சண்டை சாம்பியன் பட்டத்தை வென்று அவர் சாதனை படைத்தார்.