கொல்கத்தாவில் இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி : மழை காரணமாக தொடங்குவதில் தாமதம்
Nov 16 2017 3:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொல்கத்தாவில் மழை காரணமாக, இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங்குவது தாமதமாகியுள்ளது.
3 டெஸ்ட் , 3 ஒருநாள் மற்றும் மூன்று டி-20 போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று தொடங்கும் நிலையில், மழை காரணமாக ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. டாஸ் வென்ற இலங்கை அணி, முதலில் இந்தியாவை பேட் செய்ய பணித்துள்ளது. எனினும், மழை காரணமாக ஆட்டம் தொடங்கப்படவில்லை.