விருதுநகரில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி : 250-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

Nov 20 2017 5:04PM
எழுத்தின் அளவு: அ + அ -

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டியில், 250-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில், மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது. தற்காப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் போட்டியை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. தனபால் தொடங்கி வைத்தார்.

போட்டியில், 4 வயது முதல் 20 வயது வரை உள்ள 250 மாணவ - மாணவியர் பங்கேற்று விளையாடினர். செமி ஜீனியர், சப் ஜுனியர், ஜுனியர், சீனியர் என்ற அடிப்படையில் போட்டிகள் நடைபெற்றன. நான்கு பிரிவுகளிலும் வெற்றி பெற்றவர்களுக்கு, முதல் பரிசாக தங்கப் பதக்கம், இரண்டாம் பரிசாக வெள்ளிப் பதக்கம், மூன்றாம் பரிசாக வெண்கலப் பதக்கம் வழங்கப்பட்டன. வெற்றி பெற்ற அனைவரும், அடுத்த மாதம் கோவையில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்பர். மாவட்ட அளவிலான சிலம்பு போட்டிகளில் 250 பேர் கலந்து கொண்டது இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00