தமிழகத்தில் முதன் முறையாக யோகாவில் கின்னஸ் சாதனை : அமெரிக்க பெண்ணின் சாதனையை முறியடித்த மாணவி
Dec 22 2017 3:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 5 ஆம் வகுப்பு மாணவி தமிழகத்தில் முதல் முறையாக யோகாசனத்தில் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
விருதுநகரில் உள்ள தனியார் பள்ளியில் பயிலும் 5 ஆம் வகுப்பு மாணவி ஹர்ஷ நிவேதா. இவர் உத்தித பத்மாசனம் என்ற ஆசனத்தை தொடர்ந்து 174 விநாடிகள் செய்து தமிழகத்திலேயே முதன் முறையாக யோகாசனத்தில் கின்னஸ் சாதனை படைத்தார். இதே ஆசனத்தை அமெரிக்காவை சேர்ந்த பெண்மணி ஒருவர் 90 விநாடிகள் செய்திருந்தார். இந்த சாதனையை ஹர்ஷ நிவேதா முறியடித்துள்ளார். இந்த சாதனையை நிகழ்த்திய மாணவியை பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் பாராட்டினர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொடர்ந்து பல்வேறு சாதனைகள் புரிய முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.