இந்திய-இலங்கை அணிகள் மோதும் கடைசி 20-20 - ஹாட்ரிக் வெற்றிபெறும் முனைப்பில் இந்திய அணி தீவிரம்
Dec 24 2017 7:35AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்திய-இலங்கை அணிகளுக்கிடையிலான கடைசி டுவென்டி-20 போட்டி, மும்பையில் இன்று நடைபெறுகிறது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டுவென்டி-20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் வென்று, இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இந்திய அணி தொடரைக் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், மூன்றாவது மற்றும் கடைசி டுவென்டி-20 போட்டி, மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.
டெஸ்ட், ஒருநாள் மற்றும் டுவென்டி-20 தொடரை இழந்த இலங்கை அணி, இன்றைய போட்டியில் ஆறுதல் வெற்றி பெறும் முனைப்போடு களம் காண உள்ளது. அதேவேளையில், ஹாட்ரிக் வெற்றி பெறும் நோக்கோடு இந்திய அணியும் இன்றைய போட்டியை எதிர்கொள்கிறது.