தென்னாப்ரிக்க அணிக்கு எதிரான 6 ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடருக்கான 17 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு
Dec 24 2017 7:40AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தென்னாப்ரிக்க அணிக்கு எதிரான 6 ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடருக்கான 17 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டி முடிந்ததும், தென்னாப்ரிக்கா செல்லும் இந்திய கிரிக்கெட் அணி, அந்நாட்டுக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகள், 6 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள், மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடும் 17 வீரர்கள் கொண்ட இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டது.
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியில் ரோகித் சர்மா, ஷிகர் தவான், அஜின்கியா ரகானே, ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், எம்.எஸ் தோனி, ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஒய் சகால், புவனேஷ் குமார், பும்ரா, ஷமி, ஷர்துல் தாகூர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
தென்னாப்ரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி, வரும் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி டர்பனில் நடைபெறுகிறது.