நீலகிரியில் தேசிய அளவிலான சதுரங்க போட்டி : 8 மாநிலங்களைச் சேர்ந்த 160 விளையாட்டு வீரர்கள் பங்கேற்பு
Dec 24 2017 8:42AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் தொடங்கி உள்ள தேசிய அளவிலான சதுரங்க போட்டியில் 8 மாநிலங்களைச் சேர்ந்த 160 விளையாட்டு வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
Roll Visuals
4 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் தமிழகம், கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலங்கானா, ஜார்க்கண்ட் உட்பட 8 மாநிலங்களைச் சேர்ந்த 160 வீரர்கள் கலந்து கொண்டள்ளனர். 6 வயது முதல் 84 வயது வரை உள்ளவர்கள் இதில் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். பல்வேறு சுற்றுகளாக நடைபெறும் இப்போட்டிகளை கண்காணிக்க சர்வதேச நடுவர்கள் வந்துள்ளனர். இந்த போட்டியில் முதலிடம் பிடிக்கும் வீரருக்கு 35 ஆயிரம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட உள்ளது. மொத்தம் 25 பேருக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. சர்வதேச தரத்தில் போட்டிகள் நடத்தப்படுவதால் இளம் வீரர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமையும் என போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.