பெரம்பலூரில் 2 மணி நேரத்திற்கும் மேலாக மிதந்தபடி சாதனை முயற்சியில் மாணவர் நீச்சல்
Dec 27 2017 5:36PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதான நீச்சல் குளத்தில், 2 மணி நேரத்திற்கும் மேலாக மிதந்தபடி சாதனை முயற்சியில் மாணவர் ஒருவர் ஈடுபட்டார்.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் பகுதியைச் சேர்ந்த இளையராஜா என்ற மாணவர் அங்குள்ள, தனியார் பள்ளியில் 10 வகுப்பு பயின்று வருகிறார். அவ்வப்போது கிராமத்தில் உள்ள கிணற்றில் நன்பர்களுடன் நீச்சல் அடித்து விளையாடி வந்த, மாணவர், தண்ணீரில் தன்னிச்சையாகவே மிதந்து தீவிர பயிற்சி மேற்கொண்டார். அரை மணி, 1 மணி நேரம் என்று தினமும் பயிற்சி பெற்ற அவர், தற்போது 3 மணி நேரம் வரை தண்ணீரில் மிதக்கும் பயிற்சியை வளர்த்து கொண்டுள்ளார். தற்போது மாவட்ட விளையாட்டு மைதான நீச்சல் குளத்தில் 2 மணி நேரத்திற்கும் மேலாக மிதந்து சாதனை நிகழ்த்தினார்.