சென்னையில் 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு நடைபெற்ற சைக்கிள் மாரத்தான் - பள்ளி மாணவ-மாணவிகள் உட்பட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
Jan 21 2018 1:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னையில் பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட சைக்கிள் மாரத்தான் இன்று காலை நடைபெற்றது.
சென்னை வேளச்சேரியில், இந்து ஆன்மிக சேவை கண்காட்சி வரும் 24ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, பொதுமக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, சென்னையில் இன்று காலை சைக்கிள் மாரத்தான் நடைபெற்றது. மத்திய கைலாஷ் பகுதியில் நடைபெற்ற சைக்கிள் மாரத்தானில், பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
5 கிலோமீட்டர் தூரம் வரை நடைபெற்ற சைக்கிள் மாரத்தானில் பெரியவர்கள் பலரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.