மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச யோகா போட்டி : திருப்பூர் மாணவி தங்கப் பதக்கம் வென்றார்
Feb 1 2018 12:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச அளவிலான யோகா போட்டியில், திருப்பூரை சேர்ந்த மாணவி தங்கப் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்து உள்ளார்.
மலேசியாவில், 6-வது சர்வதேச அளவிலான யோகாசனப் போட்டிகள், கடந்த 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெற்றன. இதில், இந்தியா, சீனா, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, ஹாங்காங், வியட்நாம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் பங்கேற்ற திருப்பூர் பாண்டியன் நகரைச் சேர்ந்த மாணவி வைஷ்ணவி, பல்வேறு ஆசனங்களை செய்து தங்கப் பதக்கமும், மேலும் 2 பிரிவுகளில் வெற்றி பெற்று பதக்கம் மற்றும் கோப்பைகளையும் வென்றுள்ளார். இதன்மூலம் இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் மாணவி வைஷ்ணவி பெருமை சேர்த்து உள்ளார்.