ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி - ஆஸ்திரேலியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி - 4-வது முறையாக உலகக் கோப்பையை வென்று டிராவிட்டின் இளம்படை சரித்திர சாதனை
Feb 3 2018 6:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நியூசிலாந்தில் நடைபெற்ற ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில், ஆஸ்திரேலியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 4-வது முறையாக உலகக் கோப்பையை வென்று டிராவிட்டின் இளம்படை சரித்திர சாதனை படைத்தது.
நியூசிலாந்தில் நடந்த 12-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 16 அணிகள் பங்கேற்று விளையாடின. இதன் இறுதிப் போட்டிக்கு, இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் முன்னேறின. மவுன்ட் மாங்கானுவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில், இவ்விரு அணிகளும் மோதின. இதில், டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 47 புள்ளி 2 ஓவர்களில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 216 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனையடுத்து, 217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு, கேப்டன் பிருத்வி ஷா, Manjot Kalra சிறப்பான தொடக்கம் அளித்தனர். முதல் விக்கெட்டுக்கு 71 ரன்கள் சேர்த்த நிலையில், பிருத்வி ஷா, 29 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த கில்லும் 31 ரன்களில் பெவிலியன் திரும்பினார். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய Klara, சதம் விளாசி அசத்த, இந்திய அணி, 38 புள்ளி 5 ஓவர்களிலேயே 220 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இதன் மூலம், 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து, இந்தியா உலகக் கோப்பையை வென்றது. இதன் மூலம் 4-வது முறையாக கோப்பையை வென்று டிராவிட்டின் இளம்படை சரித்திர சாதனை படைத்துள்ளது.
இதனிடையே இந்திய அணியின் வெற்றிக்கு, பிரதமர் திரு.நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.