ஐ.சி.சி.யின் முதல் பெண் இயக்குனராக தனியார் நிறுவனத்தின் சி.இ.ஓ. இந்திரா நூயி தேர்வு : வரும் ஜூன் மாதம் பதவியேற்க உள்ளதாக ஐ.சி.சி. தகவல்
Feb 10 2018 11:29AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஐ.சி.சி.யின் முதல் பெண் இயக்குனராக தனியார் நிறுவனத்தின் சி.இ.ஓ. இந்திரா நூயி தேர்வு செய்யப்பட்டுள்ளார். வரும் ஜூன் மாதம் இவர் பதவியேற்க உள்ளதாக ஐ.சி.சி. செய்தி வாரிய கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஐ.சி.சி. எனப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தன்னாட்சி பெற்ற இயக்குனரை தேர்வு செய்வதற்கான வாரிய கூட்டம் நடந்தது. இதில் உலகளவில் சிறந்த பெண்மணியாக தேர்வு பெற்றுவரும் பிரபல தனியார் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியுமான இந்திரா நூயி ஒருமனதாக தேர்வு பெற்றார். வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள ஆண்டு கூட்டத்தில் இந்திரா நூயி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளார். இதன் மூலம் ஐ.சி.சி. அமைப்பிற்கு முதன்முறையாக பெண் ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இப்பதவியில் இவர் 2 ஆண்டுகள் நீடிப்பார். மேலும் இரண்டு முறை பதவி நீட்டிக்க வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் 6 ஆண்டுகள் இவர் தன்னாட்சி இயக்குனராக பதவி வகிக்க வாய்ப்புள்ளது.