ஐ.சி.சி. டெஸ்ட் - ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசை : 900 புள்ளியை எட்டிய முதல் இந்திய வீரர் விராட் கோலி புதிய சாதனை
Feb 21 2018 1:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஐ.சி.சி. டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசையில், 900 புள்ளியை எட்டிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை கேப்டன் விராட் கோலி படைத்துள்ளார்.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தரிவரிசைப் பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டது. இதில், பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, முதலிடத்தில் நீடிக்கிறார். அண்மையில் முடிந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில், 558 ரன்கள் குவித்த அவர், 33 புள்ளிகள் கூடுதலாகப் பெற்று, 909 புள்ளியை எட்டினார். ஏற்கெனவே, டெஸ்ட் தரவரிசையிலும் 912 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கும் கோலி, இதன்மூலம், ஒருநாள், டெஸ்ட் என இருவிதமான போட்டியிலும் 900 புள்ளியை கடந்த, முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். மேலும், சர்வதேச அளவில் 2-வது வீரர் என்ற பெருமையையும் பெற்றார். இதுதவிர, ஒட்டுமொத்தமாக ஒருநாள் போட்டியில் அதிக புள்ளிகள் எடுத்த வீரர்களுக்கான சர்வதேச பட்டியலில், கோலி 7-வது இடத்தில் உள்ளார். இப்பட்டியலில், வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ் முதலிடத்தில் நீடிக்கிறார்.