நீலகிரியில் அம்மாவின் பிறந்தநாளையொட்டி தென்னிந்திய அளவிலான கைப்பந்து போட்டி : 35 அணிகள் பங்கேற்பு
Feb 26 2018 6:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நீலகிரி மாவட்டம் கூடலூரில், அம்மாவின் பிறந்தநாளையொட்டி தென்னிந்திய அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது. இதில், 35 அணிகள் பங்கேற்று விளையாடின.
அம்மாவின் 70வது பிறந்தநாளையொட்டி, கூடலூரில், கடந்த 2 நாட்களாக தென்னிந்திய அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது. இதில், தமிழகம், கேரளா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களிலிருந்து 35 அணிகள் பங்கேற்று விளையாடின. நாக்அவுட் முறையில் போட்டிகள் நடைபெற்றன. நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில், பாலக்காடு அணியும், சென்னை அணியும் மோதின. கடும் போட்டி நிலவிய இந்த ஆட்டத்தில் 24-21, 23-25, 15-12 என்ற செட் கணக்கில் பாலக்காடு அணி வெற்றி பெற்றது. அந்த அணிக்கு 30 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசு மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.