கரூரில் மண்டல அளவிலான குத்துச் சண்டை போட்டி : வீரர், வீராங்கனைகள் ஏராளமானோர் பங்கேற்பு
Mar 6 2018 11:30AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கரூரில் முதன்முறையாக நடைபெற்ற மண்டல அளவிலான குத்துச் சண்டை போட்டியில் ஏராளமான வீரர், வீராங்கனைகள் பங்கேற்று, தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
கரூரில் மாவட்டத்தில் மண்டல அளவிலான குத்துச்சண்டை போட்டி, குத்துசண்டை கழகம் சார்பில் முதன் முறையாக நடைபெற்றது. இப்போட்டியில் சப்ஜூனியர், ஜூனியர், சீனியர் பிரிவுகளுக்கான குத்துச்சண்டை போட்டிக்கு கரூர் மாவட்ட குத்துச்சண்டை கழகம் சங்கத்தலைவர் வின்னர் எஸ்.சசிதலைமை வகித்தார். இந்த போட்டியில் 14, 17 மற்றும் 19 வயதுக்குட்பட்டோர் மற்றும் 19 வயதுக்கு மேற்பட்டோர் என 4 பிரிவுகளின் கீழ்போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் சுமார் 300க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்று, தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.