டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய அணி கேப்டன் உள்ளிட்ட 3 பேர் அதிரடி நீக்கம் - மோசடியில் ஈடுபட்ட வீரர்களுக்கான தண்டனை குறித்து அறிவிக்கிறது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்
Mar 28 2018 12:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின்போது பந்தை சேதப்படுத்திய ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் Bancroft, அதற்கு ஆதரவாக இருந்த கேப்டன் ஸ்மித் உள்ளிட்ட 3 பேர் அந்த அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். இம்மூவருக்கும் குறைந்தபட்சம் ஓராண்டு தடைவிதிக்க வாய்ப்பிருக்கும் நிலையில், இதுகுறித்த முடிவு இன்று அறிவிக்கப்படுகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன் கேப்டவுனில் நடைபெற்ற தென்னாப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின்போது, ஆஸ்திரேலிய அணி வீரர் Bancroft, பந்தை சேதப்படுத்தியது வீடியோ காட்சி மூலம் அம்பலமானது. இதற்கு அந்த அணியின் கேப்டன் ஸ்மித், துணை கேப்டன் வார்னர் ஆகியோரும் ஆதரவாக இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் ஆஸ்திரேலிய பிரதமர் மால் கம்டர் புல், நேரடியாக தலையிட்டு நடவடிக்கை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து, சதியில் ஈடுபட்ட 3 வீரர்களும் அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டதோடு, அவர்கள் அனைவரும் உடனடியாக தாயகம் திரும்ப வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இந்த 3 பேருக்குமான தண்டனை குறித்தும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இன்று முக்கிய முடிவு எடுக்கவுள்ளதாக, தென்னாப்ரிக்காவின் ஜோகன்னஸ்பெர்க் நகரில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கிரிக்கெட் ஆஸ்திரேலிய அமைப்பின் முதன்மை நிர்வாகி ஜேம்ஸ் சதர்லாண்டு தெரிவித்தார்.
அதிகபட்சமாக 3 வீரர்களுக்கும் வாழ்நாள் தடை விதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இதனிடையே, இந்த சதித்திட்டத்திற்கு மூலக்காரணமாக இருந்த டேவிட் வார்னரை, ஆஸ்திரேலிய அணியின் மற்ற வீரர்கள் முற்றிலுமாக புறக்கணித்திருப் பதாகவும், அவர் தங்களுடன் இருக்கக்கூடாது என்று கூறியிருப் பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.