பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு : மாண்புமிகு அம்மா கொடுத்த ஊக்கமே பதக்கம் வெல்ல காரணம்
Apr 19 2018 3:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்த பளு தூக்கும் வீரர் சதீஷ் சிவலிங்கம், டேபிள் டென்னிஸ் வீரர் அந்தோணி அமல்ராஜ் ஆகியோர் இன்று தாயகம் திரும்பினர். சென்னை விமான நிலையத்தில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆஸ்திரேலியாவில் அண்மையில் நடந்து முடிந்த காமன்வெல்த் போட்டியில், இந்தியாவின் சார்பில் பங்கேற்ற தமிழக வீரர் சதீஷ்சிவலிங்கம் பளு தூக்குதலில் தங்கம் வென்றார். டேபிள் டென்னிஸ் வீரரான அந்தோணி அமல்ராஜும் தங்கம் வென்று தாயகத்திற்கு பெருமை சேர்த்தார். இவ்விருவரும் இன்று தாயகம் திரும்பியபோது, சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மாண்புமிகு அம்மா அளித்த ஆக்கமும், ஊக்கமுமே தாங்கள் பதக்கம் வெல்ல காரணமாக இருந்ததாகவும், அடுத்து வரும் போட்டிகளிலும் பதக்கங்களை வென்று அவருக்கு பெருமை சேர்ப்போம் என்றும் அமல்ராஜ் தெரிவித்தார்.