மலேசியாவில் நடைபெற்ற ஆசிய நாடுகளுக்கான யோகா போட்டி : தூத்துக்குடி மாணவி தங்கம் வென்று சாதனை
May 17 2018 1:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மலேசியாவில் நடைபெற்ற ஆசிய நாடுகளுக்கான யோகாப் போட்டியில் தூத்துக்குடி மாணவி தங்கம் வென்று சாதனை புரிந்துள்ளார்.
மலேசியாவில் கடந்த 13-ம் தேதி ஆசிய நாடுகளைச் சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கான 7-வது ஆண்டு யோகாப் போட்டி நடைபெற்றது. இதில் சிங்கப்பூர், மலேசியா, இந்தியா, தாய்லாந்து, பூடான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 80 மாணாக்கர்கள் கலந்து கொண்டனர். அதில் தூத்துக்குடியை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி கன்சிகாவும் பங்கேற்றார். இவர், 15 வயது முதல் 20 வயது வரை உள்ளவர்களுக்கான பிரிவில் பங்கேற்று, பத்மாசனம், ஆஞ்சநேயர் ஆசனம், யோக நித்திரா உள்ளிட்ட 15 ஆசனங்களை செய்து போட்டியில் வெற்றி பெற்று, தங்கம் பெற்று சாதனை புரிந்துள்ளார்.