தூத்துக்குடியில் தேசிய அளவிலான ஹாக்கி போட்டியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்பு
May 18 2018 11:56AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், லட்சுமி அம்மாள் நினைவு சுழற்கோப்பைக்கான தேசிய அளவிலான ஹாக்கி போட்டி நடைபெற்று வருகிறது. வரும் 27-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தப்போட்டியில், நேற்று நடைபெற்ற ஆட்டத்தில், புதுடெல்லி போஸ்டல் அணியும், கோவில்பட்டி லட்சுமி அம்மாள் ஹாக்கி அணியும் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப்போட்டியில், 3-க்கு ஒன்று என்ற கணக்கில் புதுடெல்லி போஸ்டல் அணி வெற்றிபெற்றது.
இதனிடையே, தேனி மாவட்டம் பெரியகுளம் சில்வர் ஜூபிலி ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் பி.டி. சிதம்பரம் சூரிய நாராயணன் நினைவு சுழற்கோப்பைக்கான 59-ஆம் ஆண்டு தேசிய அளவிலான கூடைப்பந்தாட்டப் போட்டியின் லீக் சுற்று ஆட்டத்தில், அரைஸ் ஸ்டீல்ஸ் சென்னை அணியை, 90-க்கு 88 என்ற புள்ளி கணக்கில் ஏ.எஸ்.சி பெங்களுர் அணி தோற்கடித்தது.
மற்றொரு போட்டியில், டிசல் லோகே ஒர்க்ஸ் வாரணாசியை, ஈ.எம்.ஈ போபால் அணி 65-க்கு 57 என்ற புள்ளி கணக்கில் தோற்கடித்தது. இந்திய விமானப்படை புதுடெல்லி அணியும் - தெலுங்கான மாநில அணிக்கும் இடையே நடைபெற்ற போட்டியில், இந்திய விமானப்படை புதுடெல்லி அணி, 67-க்கு 43 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்றது.
கேரளா மின் வாரிய அணிக்கும் - இந்திய கப்பல்படை லோனோவாலா அணிக்கும் இடையே நடைபெற்ற போட்டியில், இந்திய கப்பல்படை லோனோவாலா 60க்கு56 என்ற புள்ளிகள் அடிப்ப்டையில் வெற்றி பெற்றது.