இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் செர்பியாவின் Novak Djokovic காலிறுதிக்கு முன்னேற்றம்
May 18 2018 11:59AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி, ரோம் நகரில் நடைபெற்று வருகிறது. இதில், உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி வீரர் - வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இதன் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதி முந்தைய சுற்று ஆட்டத்தில், முன்னாள் முதல்நிலை வீரரான செர்பியாவின் Novak Djokovic, ஸ்பெயின் வீரர் Albert Ramos Vinolas-ஐ எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்திய Djokovic, 6-1, 7-5 என்ற நேர் செட்கணக்கில் வெற்றிபெற்று, காலிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில், ஜெர்மனி வீரர் Alexander Zverev, பிரிட்டனின் Kyle Edmund-ஐ 7-5, 7-6 என்ற நேர் செட்கணக்கில் தோற்கடித்து, காலிறுதிக்கு முன்னேறினார்.
இதேபோல், குரோஷியாவின் Marin Cilic, ஃபிரான்ஸ் வீரர் Benoit Paire-ஐ 6-3, 6-4 என்ற நேர் செட்கணக்கில் தோற்கடித்து, காலிறுதிக்கு முன்னேறினார்.