நாகர்கோவில் நடைபெற்ற மாரத்தான் போட்டி : சிறுவர் சிறுமிகள் உட்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு
May 21 2018 12:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இயற்கையை பாதுகாத்தல், குப்பையில்லா நகரம், சுகாதாரமான கடற்கரை போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில். சிறுவர் சிறுமிகள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
மனித வாழ்வின் மறைமுக உணவான மரங்கள், மலைகள் போன்ற இயற்கையை அழிவில் இருந்து பாதுகாக்க வேண்டும், குப்பைகள் இல்லாத நகரம் உருவாக்க வேண்டும், கழிவுகள் கடலில் கலப்பதையும் கடற்கரைகளில் கழிவுகள் கொட்டப்படுவதையும் தடுக்கும் வகையில், பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், நாகர்கோவில் அருகே பெரியகாடு மீனவ கிராமத்தில் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டிகளில் சிறுவர் சிறுமிகள் உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். போட்டிகளில் முதல் 3 இடங்களை பெற்ற வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதனிடையே, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்றவரும் லட்சுமி அம்மாள் நினைவு அகில இந்திய ஹாக்கி போட்டியின் லீக் ஆட்டத்தில் 5க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் நியூடெல்லி ஓ.என்.ஜி.சி., வெற்றிபெற்றது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் செகந்திரபாத் சவுத்சென்ட்ரல் ரயில்வே அணியும், நியூடெல்லி இந்தியன் போஸ்டல் அணியும் மோதின. இதில், செகந்திரபாத் சவுத்சென்ரல் ரயில்வே அணி 3க்கு ஒன்று என்ற கணக்கில் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.