உலக சுற்றுசூழல் தினம் - கன்னியாகுமரியில் நடைபெற்ற மினி மாரத்தான் ஓட்டம் : சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்பு
Jun 4 2018 11:12AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரியில் நடைபெற்ற மினி மாரத்தான் ஓட்டத்தில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
உலக சுற்றுசூழல் தினம் ஆண்டு தோறும் ஜூன் மாதம் 5 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி, கன்னியாகுமரியில் சுற்றுசூழல் துறை மற்றும் வனத்துறை இணைத்து பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் சுற்று சூழல் குறித்து விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. இதில் 10 வயது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
அங்கு வந்த சுற்றுலா பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது.