பாரீசில் நடைபெற்று வரும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் - 11-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் ஸ்பெயின் ரஃபேல் நடால்
Jun 11 2018 5:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில், ஸ்பெயினின் ரஃபேல் நடால், 11-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி, பாரீஸ் நகரில் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப் போட்டியில், உலகின் முதல் நிலை வீரரும், நடப்பு சாம்பியனுமான ஸ்பெயின் ரஃபேல் நடால், ஏழாம் நிலை வீரரான ஆஸ்திரியாவின் டொமினிக் தீமை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், தொடக்க முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நடால், 6-4, 6-3, 6-2 என்ற நேர் செட்கணக்கில் வெற்றிபெற்றார்.
இந்த வெற்றியின் மூலம், 11-வது முறையாக பிரெஞ்ச் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்று ரஃபேல் நடால் சாதனை படைத்தார்.